"உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயார்"

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதனை எதிர்கொள்ள அதிமுக தயாராக இருப்பதாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் டெல்லி சென்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர், பிரதமர் மோடியை சந்தித்து, மேகதாது அணை விவகாரம், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது உள்ளிட்ட பிரச்னைகளில், மத்திய அரசு நேரடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து, தமிழகம் திரும்பிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதனை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளதாகக் கூறினார்.

Exit mobile version