எம்ஜிஆர் நினைவுநாளையொட்டி நினைவிடத்தில் அதிமுக சார்பில் மரியாதை!

மறைந்த முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 33வது நினைவுநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று அஞ்சலி செலுத்த உள்ளனர்.

மறைந்த முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 33வது நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நினைவிடத்தில் காலை 10 மணிக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்துகின்றனர். இதனைத் தொடர்ந்து, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக செயலாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அனைவருக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் எம்ஜிஆர் நினைவுநாளை ஒட்டி மரியாதை செலுத்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமைக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

Exit mobile version