அண்ணா நினைவிடத்தில் அதிமுக சார்பில் மரியாதை!

பேரறிஞர் அண்ணாவின் 52வது நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். அப்போது அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

 

Exit mobile version