நாடாளுமன்ற வளாகத்தில் அ.தி.மு.க எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்.

மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பி-க்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் புதிதாக அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கான வரைவுத் திட்ட அறிக்கையை தயார் செய்து கொண்டிருக்கிறது. இதற்கு, தமிழக அரசு மற்றும் விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேகேதாட்டுவில் அணை கட்டினால், டெல்டா பகுதிகள் கடுமையான பாதிக்கப்படும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார். மேலும், இதுதொடர்பாக  உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்நிலையில், மேகேதாட்டுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற குழுத்தலைவர் வேணுகோபால் தலைமையில், அதிமுக எம்.பிக்கள், நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேகேதாட்டுவில் அணை கட்டக் கூடாது என்று வலியுறுத்திய அவர்கள், அதற்காக மத்திய அரசு வழங்கிய அனுமதியை திரும்ப பெற வேண்டும் என்று முழக்கமிட்டனர்.

Exit mobile version