உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்ற அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள்

சபாநாயகர் அனுப்பிய விளக்க நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க தடைகோரி அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் பிரபு, கலைசெல்வன் மற்றும் ரத்தினசபாபதி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்றனர். பிரபு, கலைசெல்வன் மற்றும் ரத்தினசபாபதி ஆகிய 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் நிலைப்பாடு காரணமாக 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்ககோரி சபாநாயகர் தனபாலை சந்தித்து அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் மனு அளித்தார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் தனபால், 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.

இதனை அடுத்து தங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் 3 எம்.எல்.ஏ.க்களும் மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு எதிராக தொடுத்த வழக்கை 3 அதிமுக எம்எல்ஏ-க்கள் வாபஸ் பெற்றனர். எம்எல்ஏ-க்கள் பிரபு, கலைசெல்வன் மற்றும் ரத்தினசபாபதி ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அண்மையில் சந்தித்தனர்.

அதனையடுத்து தற்போது 3 பேரும் சபாநாயகர் அனுப்பிய விளக்க நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க தடைகோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்றனர்.

Exit mobile version