நாளை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், சென்னையில் நாளை நடைபெற உள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற இருப்பதையொட்டி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் நாளை நடைபெறும் என தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாலை 4.30 மணிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது. கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளுமாறு அதிமுக தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.

Exit mobile version