சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக உறுப்பினர்கள் தர்ணா

அராஜக போக்கை கடைப்பிடிக்கும் திமுக அரசை கண்டித்து, சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக உறுப்பினர்கள், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டப்பேரவை இன்று கூடியதும், பொய் வழக்கு போடும் திமுக அரசை கண்டித்து சட்டமன்ற அதிமுக உறுப்பினர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து, பதாதைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவது உள்ளிட்டவற்றை கண்டித்து சட்டமன்ற அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது அதிமுக உறுப்பினர்கள் பதாதைகளை ஏந்தியவாறு கண்டன முழக்கங்களை எழுப்பி திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொடர்ந்து திமுக அரசின் அராஜகத்தை கண்டித்து கலைவாணர் அரங்கத்தின் வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

சட்டமன்ற அதிமுக உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்துக்கு, மற்ற எதிர்கட்சியினரும் ஆதரவு தெரிவித்து, திமுக அரசுக்கு எதிராக கண்டன முழுக்கங்களை எழுப்பினர்.

Exit mobile version