ஆளுநருடன் அதிமுக இன்று சந்திப்பு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று சந்திக்கின்றனர்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும், நிர்வாகிகள் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவி சோதனை என்னும் பெயரில் பழிவாங்கும் நடவடிக்கையில் திமுக அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், கொடநாடு கொலை வழக்கிலும் அதிமுகவினர் மீது அவதூறு பரப்பும் நடவடிக்கையில் திமுக அரசு இறங்கியுள்ளது. இந்த நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் இன்று காலை 11 மணிக்கு சந்திக்க உள்ளனர். அப்போது, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போடும் திமுக அரசின் நடவடிக்கைகள் குறித்து முறையிட உள்ளனர்.

 

Exit mobile version