திருவாரூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்: அமைச்சர் சீனிவாசன்

திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என திண்டுக்கல்லில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பிளாஸ்டிக் தடை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திண்டுக்கல் மாநகராட்சி அலுலவகம் முன்பு ரோலர் ஸ்கேட்டிங் பேரணி நடத்தப்பட்டது. இதை வனத்துறை அமைச்சர் சீனிவாசன் துவக்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்த பேரணி மாநகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சீனிவாசன், திருவாரூரில் கஜா புயல் நிவாரண பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதால் பொதுமக்களுக்கு ஆளுங்கட்சி மீது நன்மதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக 100 சதவிகிதம் வெற்றி பெறும் என்றார்.

Exit mobile version