மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் அதிமுக அரசு முன்னோடி : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துவதில், அதிமுக அரசு சிறந்து விளங்குவதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதம் தெரிவித்தார்.

கோவை மாவட்டம், பூ மார்க்கெட் ராமலிங்க சௌடேஸ்வரி கூட்டுறவு பண்டக சாலை நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை வழங்கினார். பின்னர் விழாவில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதை எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே குறை கூறுவதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர், மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துவதில் அதிமுக அரசு சிறந்து விளங்குவதாக கூறினார்.

Exit mobile version