பிப்ரவரி 8-ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

வரும் 8ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், வரும் 8ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு, மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர்  தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும், சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது. வரும் பிப்ரவரி 24ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாளை அதிமுக கழகத்தொண்டர்கள் கொண்டாடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

Exit mobile version