விழுப்புரத்தில் அஇஅதிமுக சார்பாக ஏழை எளிய மக்களுக்கு முகக் கவசம் விநியோகம்!!

விழுப்புரத்தில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வழிகாட்டுதலின் படி அஇஅதிமுக சார்பாக வழங்கப்பட்டு வரும் முகக் கவசங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முகக் கவசம் அணிவது அவசியம் என, பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு விழுப்புரம் மாவட்டம் முழுவதும் அஇஅதிமுக சார்பாக அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வழிகாட்டுதலின் படி ஏழை எளிய மக்களுக்கு முகக் கவசம் வழங்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக, 20 ஆயிரம் முகக் கவசங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 3 அடுக்கு முகக் கவசம், வெற்றி வேர் முகக் கவசம் என பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட முகக் கவசங்கள் வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் புகைப்படங்கள் அச்சிடப்பட்டு முகக் கவசங்களும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், நியூஸ் ஜெ சின்னம் பொறிக்கப்பட்ட முகக் கவசங்களும் வழங்கப்பட்டு வருகிறது. அஇஅதிமுகவினரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.

Exit mobile version