மக்களவை தேர்தல் தொடர்பாக அதிமுக ஆலோசனை கூட்டம்

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 18 தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவோருக்கான நேர்காணல் நாளை நடைபெறும் நிலையில், அது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மூத்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Exit mobile version