அதிமுக வேட்பாளர் ரவீந்தரநாத் குமார் தீவிர வாக்குசேகரிப்பு

தேனி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட இடங்களில் அதிமுக வேட்பாளர் ரவீந்தரநாத் குமார் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

தேனி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட உசிலம்பட்டி, அடுத்த தி.விளக்கு, செம்பட்டி, கட்டதேவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து அமைச்சர் ஆர்.பி உதயகுமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நூற்றுக்கணக்கான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். வாக்கு சேகரித்து பேசிய வேட்பாளர் ரவீந்திரநாத் குமார், அ.தி.மு.க மகத்தான வெற்றிக் கூட்டணியை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார். மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் காலம் தாழ்த்தாமல் நிறைவேற்றி கிராம வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என உறுதி அளித்தார்.

Exit mobile version