கலசப்பாக்கத்தில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வாக்குச் சேகரிப்பு

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டுத் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துச் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, அதிமுக கொடியேற்றப்பட்டது. அதன் பின்னர் பேசிய அவர், அதிமுக அரசு செய்த நலத்திட்டங்களை எடுத்துரைத்ததுடன், திமுகவின் பொய்ப் பிரசாரங்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதேபோல், உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஈரோடு மாவட்டம், மொடச்சூரில் அதிமுக வேட்பாளர்கள் பொதுமக்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மொடச்சூர் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் ஸ்ரீவெங்கடேஸ்வரி மற்றும் மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் அனுராதாவை ஆதரித்து அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது, கடந்த 8 ஆண்டுகளில் மொடச்சூர் ஊராட்சிக்கு 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிமுக அரசு செயல்படுத்திய திட்டங்களைக் கூறி, துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.

Exit mobile version