புயலால் பாதித்த விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்

தஞ்சையில் புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை மற்றும் தென்னங்கற்றுகளை வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்.

கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பெரிதும் பாதிப்படைந்தன. தென்னை வாழை உள்ளிட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து விவசாயிகளுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியது. தமிழக அரசு மற்றும் பல்வேறு தரப்பினரும் புயல் பாதித்த மக்களுக்கு நிவாரண உதவிகளையும் செய்துவருகிறனர்.

இந்நிலையில், தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு 47 கோடியே 27 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை மற்றும் தென்னங்கன்றுகளை தமிழக அரசின் சார்பில் வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்.

 

 

 

Exit mobile version