விவசாய பயிற்சி முகாமில் பிரான்ஸ் நாட்டு மாணவர்கள்

காரைக்காலில் விவசாயப் பணிகள் தொடர்பான பயிற்சி முகாமில் பிரான்ஸ் நாட்டு மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

காரைக்காலில் உள்ள பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஆண்டுதோறும் இந்த பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 12 ஆவது ஆண்டாக நடைபெறும் பயிற்சி முகாமில் 28 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் புதுச்சேரியில் விவசாயிகளின் வீடுகளில் தங்கியிருந்து வேளாண் பணிகள் தொடர்பான பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளனர். மேலும், தமிழக பகுதிகளான கோவை, உதகை, மதுரை, ராமேஸ்வரம், கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று விவசாயப் பணிகள் குறித்து கேட்டறிய உள்ளனர்.

Exit mobile version