விவசாயிகளுக்கு மானிய வேளாண் இயந்திரங்கள்

தமிழ்நாடு அரசு தோட்டக்கலை துறை சார்பாக, 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மானியத்துடன் வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மைத் துறையின் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பாக, 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக, இதில் டிராக்டர், ரோட்டாவெட்டர் கலப்பைகள், பவர் டில்லர்கள், மினி டிராக்டர், களை எடுக்கும் கருவி உள்ளிட்ட பல்வேறு இயந்திரங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் மற்றும் வேளாண் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version