முதலமைச்சருக்கு விவசாய சங்க நிர்வாகிகள் நன்றி!

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு, விவசாய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

டெல்டா மாவட்டங்களை சேர்ந்த விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் ஏராளமானோர் அமைச்சர்கள் காமராஜ், துரைக்கண்ணு ஆகியோர் தலைமையில் முதலமைச்சரை சந்தித்தனர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் மனமார்ந்த நன்றி தெரிவித்தனர்.

Exit mobile version