இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சு தேர்வு

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ள நிலையில், மழை பெய்வதால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மலிங்கா தலைமையிலான இலங்கை அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி, அசாம் மாநிலம் கவுகாத்தில் நடைபெறுகிறது.  இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், மழை பெய்வதால் ஆட்டம் தொடங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.

Exit mobile version