பொங்கலுக்கு பிறகு ரஜினிகாந்த் முக்கிய முடிவை அறிவிப்பார்: சத்யநாராயணன்

பொங்கல் பண்டிகைக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் முக்கிய முடிவை அறிவிப்பார் என அவரது சகோதரர் சத்யநாராயணன் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள உனிசெட்டி கிராமத்தில், ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நடைபெற்ற ரஜினிகாந்தின் 69வது பிறந்தநாள் விழாவில் அவரது சகோதரர் சத்யநாராயணன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொங்கல் பண்டிகைக்கு பிறகு ரஜினிகாந்த் முக்கிய முடிவை அறிவிக்க உள்ளதாக தெரிவித்தார்.

Exit mobile version