2 நாள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் கூடியது சட்டப்பேரவை

இரண்டு நாள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது.

சட்டப்பேரவையில் 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கடந்த 14ஆம் தேதி தாக்கல் செய்தார். இதையடுத்து 2 நாட்கள் இடைவெளிக்கு பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது.

4வது ஆண்டில் முதலமைச்சராக அடியெடுத்து வைத்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவைக்கு வந்தவுடன், அமைச்சர்கள் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் மேஜையை தட்டி உற்சாகமாக அவரை வரவேற்றனர். தொடர்ந்து, மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சாவித்ரி அம்மாள், ராஜேந்திர பிரசாத், ராஜசேகரன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

Exit mobile version