6 மணிக்கு பின்னர் ஓட்டுச்சாவடிக்குள் நுழைய முயன்ற திமுகவினர்

வேலூர்அடுத்த கீழ்விசாரத்தில் வாக்குப்பதிவு நேரம் முடிந்த பின்பு வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி நுழைய முயன்ற திமுகவினரை கலைக்க வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

வேலூர் மாவட்டம் அரக்கோணம் மக்களவை தொகுதிக்குட்பட்ட கீழ் விசாரத்தில் மாலை 6 மணிக்கு முன்னதாக வாக்குச்சாவடிக்கு வந்த அனைவரும் முறையாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து வாக்குப்பதிவு முடிவுற்றதாக அதிகாரிகள் அறிவித்தனர். இந்த நிலையில் 6 மணிக்கு மேல் அங்கு வந்த திமுகவினர் சிலர் அத்துமீறி வாக்குச்சாவடிக்குள் நுழைய முயன்றனர். அதிகாரிகளும் காவல்துறையினரும் எடுத்து கூறியும் அவர்கள் தொடர்ந்து வாக்கு வாதம் செய்தவாரே உள்ளே நுழைய முயன்றனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறையினர் உடனடியாக வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனையடுத்து திமுகவினர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

Exit mobile version