ஆப்கானிஸ்தானில் தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் படுகாயமடைந்தனர். தலைநகர் காபூலில் உள்ள சிறைச்சாலை முன்பு தற்கொலை படையினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இத்தகவலை அந்நாட்டு உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இச்சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சிறைச்சாலை ஊழியர்களும், சிறையின் வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரும் அடங்குவர். 100க்கும் மேற்பட்ட சிறைச்சாலை ஊழியர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சோதனை செய்து கொண்டிருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.