கள்ளக்காதல் தகராறில் டிராக்டரை ஏற்றி விவசாயி கொலை

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே கள்ளக்காதல் தகராறில் டிராக்டரை ஏற்றி விவசாயி கொலை கள்ளக்காதலன் மற்றும் மனைவி கைது பரமத்தி காவல்துறையினர் நடவடிக்கை.

கரூர் மாவட்டம் அரவகுறிச்சி அடுத்த பரமத்தி அருகே உள்ளது முடிகணம். இந்த ஊரில் வசித்து வரும் மனோகரனுக்கு, சித்ரா என்ற மனைவியும், ஒன்பது வயது மகனும் உள்ளனர். இவரது வீட்டிற்கு அருகில் சுதாகர் என்ற 20 வயது இளைஞர் வசித்து வருகிறார்.சுதாகர் மற்றும் சித்ராவிற்கு சில வருடங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. இதை அறிந்த அவரது கணவர் மனோகர் சுதாகரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுதாகர் தன்னுடைய டிராக்டர் மனோகர் மீது ஏற்றி கொன்று தப்பிவிட்டார். மனோகரன் கொலைக்கு காரணமாக இருந்த கள்ளக்காதலன் சுதாகர் மற்றும் சித்ராவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

Exit mobile version