பெங்களூருவில் ஏரோ இந்தியா விமான கண்காட்சி

பெங்களூருவில் நடைபெற்று வரும் ஏரோ இந்தியா விமான கண்காட்சியினை மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கிவைத்தார்.

கர்நாடகாவின் பெங்களூருவில் இன்று தொடங்கி வரும் 24ம் தேதிவரை ஏரோ இந்தியா விமான கண்காட்சி நடைபெறுகிறது. மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்நிகழ்வினை தொடங்கி வைத்தார். கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, முப்படை உயரதிகாரிகள் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சியான இதில், பல்வேறு விமானங்கள் கலந்துகொண்டு சாகசங்கள் மேற்கொள்ளவுள்ளன.

பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது சூரியகிரன் அணியின் 2 விமானங்கள் விபத்துக்குள்ளானதில் ஒரு விமானி உயிரிழந்தார். இச்சம்பவத்திற்கு துக்கம் தெரிவிக்கும் விதமாக சூரியகிரன் அணி கண்காட்சியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version