உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் 2வது நாளாக ஆலோசனைக் கூட்டம்

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கூட்டணிக் கட்சி தலைவர்களுடன், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் 2வது நாளாக நடைபெற்றது.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கூட்டணிக் கட்சி தலைவர்களுடன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நேற்று தேமுதிக, பாமக, தமாக ஆகிய கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தல் உட்பட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

Exit mobile version