அமைச்சர் சரோஜா தலைமையில் நகராட்சி விரிவாக்கம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பணிபுரியும் பெண்களுக்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய குடியிருப்பு பகுதிகள் அமைக்கப்படும் என்று சத்துணவுத் துறை அமைச்சர சரோஜா தெரிவித்துள்ளார்

ராசிபுரம் நகரை விரிவுபடுத்துவதற்காக அமைச்சர் சரோஜா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அமைச்சர், ராசிபுரத்தில் புறவழிச்சாலை பணி நடைபெற்று வரும் சூழலில், நகராட்சி விரிவாக்கம் அடையும் பகுதிகளில், அடிப்படை வசதிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார். மேலும் தனியார் நிதி நிறுவனத்தின் உதவியுடன் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பணி புரியும் பெண்கள் தங்குவதற்கான குடியிருப்பு பகுதிகள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Exit mobile version