நெல்லையில் ஆட்சியர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்

நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலை முன்னிட்டு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சித் தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து பணிகளும் துரிதபடுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் வேட்பு மனுக்கள் பெறப்பட உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித் தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் நடந்த கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் பிரச்சார திட்டங்கள், தேர்தலுக்கு ஒத்துழைப்பு தருவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

 

Exit mobile version