கோபிசெட்டிபாளையத்தில் பாஜகவின் ஈரோடு வடக்கு மாவட்ட நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பாஜகவின் ஈரோடு வடக்கு மாவட்ட நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சித்தி விநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜகவினர் கூட்டணி கட்சியான அதிமுகவுடன்  இணைந்து தேர்தல் பணியாற்றுவது, கூட்டணி வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல கருத்துகள் ஆலோசிக்கப்பட்டது.

Exit mobile version