உலக தற்கொலை தடுப்பு நாளையொட்டி மாணவர்களுக்கு அறிவுரை

விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலத்தில் உலக தற்கொலை தடுப்பு நாளையொட்டி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மனநல மருத்துவர் பிரவீனா கலந்து கொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் அறிவுரைகளை வழங்கினார். மேலும் தற்கொலை தடுப்பு பற்றிய பேச்சுப் போட்டி, ஓவியப்போட்டி போன்றவையும் நடைபெற்றன.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு தொழிற்பயிற்சி நிலைய அலுவலர்கள் என சுமார் 200க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version