வாக்கு எண்ணிக்கை தொடர்பாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை

வாக்கு எண்ணிக்கை தொடர்பாக, மே 2ம் தேதி, வீடியோ கான்பரன்ஸ் மூலம் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் உள்ள 38 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 18ம் தேதி தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. மே 23ம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு ஆலோசனை நடத்துகிறார். நாளை மறுநாள் மாலை 4 மணியளவில் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக அவர் ஆலோசனை நடத்தவுள்ளார்

Exit mobile version