ஐ.பி.எல் தொடர், குறைந்த போட்டிகள் கொண்ட தொடராக நடத்துவது குறித்து ஆலோசனை!

ஐ.பி.எல் தொடர், குறைந்த போட்டிகள் கொண்ட தொடராக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

கொரோனா தாக்கம் காரணமாக 29ம் தேதி துவங்க இருந்த ஐ.பி.எல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஐ.பி.எல் ஆட்சி மன்றக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கங்குலி, ஐ.பி.எல் தொடர், குறைந்து போட்டிகள் கொண்ட தொடராக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார். ஆயினும், 2 வாரங்களுக்கு பிறகு கொரோனா நிலவரம் குறித்து ஆலோசித்த பிறகே போட்டிகளின் எண்ணிக்கை உறுதியாக சொல்ல முடியும் என அவர் தெரிவித்தார். மேலும், ஐ.பி.எல் போட்டிகள் வெளிநாட்டில் நடத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version