டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவசாயிகள் பிரச்சனை குறித்து ஆலோசனை-தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்

டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவசாயிகள் பிரச்சனை குறித்து ஆலோசனை நடத்தியதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற எதிர்கட்சித் தவைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், சென்னை திரும்பிய மு.க.ஸ்டாலின், விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், இன்றைய அரசியல் நிலவரம் மற்றும் விவசாயிகள் பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறினார். மேகதாது அணை குறித்து சோனியாகாந்தி, தேவகவுடாவுடன் விவாதித்தாக கூறிய ஸ்டாலின், இந்திய பொருளாதாரத்தின் மீது மோடி அரசு சர்ஜ்ஜிகல் ஸ்டிரைக் நடத்திக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார். 7 பேர் விடுதலை தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதா என, செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, இதுதொடர்பாக அனைத்துக் கூட்டத்தில் விவாதிக்கவில்லை என ஸ்டாலின் கூறினார்.

Exit mobile version