அதிமுக வெற்றி பெற பாடுபடுவோம் – ஜான் பாண்டியன் கருத்து!

அதிமுக முன்னள் அமைச்சர்கள் தங்கமணி, ஜெயகுமார், கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் ஆகியோர் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் மற்றும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை. ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோரை சந்தித்தனர். இச்சந்திப்பானது ஈரோடு கிழக்குத் தொகுதியின் இடைத்தேர்தல் குறித்து ஆலோசிக்கும் விதமாக நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்த இடைத்தேர்ந்தலில் அதிமுக நிச்சயமாக வெல்லும் என்று நம்பப்படுகிறது.

இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவினை ஆதரிப்பதாக தகவல் தெரிவித்தார். இந்த இடைத்தேர்தலில் அதிமும வெற்றி அடைவது உறுதி என்று அவர் கருத்து தெரிவித்தார். மேலும் எங்கள் கட்சியின் முழு ஒத்துழைப்பையும் அதிமுகவிற்கு தருகிறோம் என்று அவர் கூறினார். மேலும் ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுகதான் வெற்றிபெரும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர். தனபாலன் அவர்கள் தெரிவித்தார். சென்னை அசோக் நகரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எங்கள் கட்சியின் முழு ஆதரவும் அதிமுகவிற்குதான் என்று கூறினார். மேலும் இதன் மூலம் பெரும் மாற்றம் உண்டாகும் என்று அவர் தெரிவித்தார்.

Exit mobile version