எம்.ஜி.ஆர் சிலைக்கு முத்தம் கொடுத்த தொண்டர்!

கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று உச்சநீதிமன்றம் இன்றைக்கு அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. இடைக்காலப் பொதுசெயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தொடர்வார் என்ற முடிவை எதிர்த்து எதிர் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கைத் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்ற தினேஷ்- மகேஸ்வரி அமர்வு தீர்ப்பு வழங்கியது. மேலும் ஓபிஎஸையும் அவரது தரப்பினரையும் கட்சியைவிட்டு நீக்கியது செல்லும் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதனால் உற்சாகத்தில் உள்ள அதிமுக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவித்து வருகிறார்கள். மேலும் முன்னாள் முதலமைச்சர்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்தும் மகிழ்ச்சியை தெரிவித்தனர். உற்சாகத்தின் உச்சத்திற்கு சென்ற அதிமுக தொண்டர் ஒருவர் எம்.ஜி.ஆர் அவர்களின் சிலைக்கு முத்தம் கொடுத்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Exit mobile version