விருதுநகரில் சாதனை படைத்தது அதிமுக

தமிழகத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில்  அ.தி.மு.க. அதிக இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவி மொத்தம் 20 இடங்களில்  13 இடங்களை அதிமுக  கைப்பற்றி வெற்றியை பெற்று உள்ளது. அதிமுகவை எதிர்த்து போட்டியிட்ட திமுக 7 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது.

அதேபோல்  ஒன்றிய கவுன்சிலர் பதவியில்  விருதுநகரில் உள்ள வெம்ப கோட்டை ஊராட்சி  20 இடங்கள் முழுவதையும் அதிமுக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. விருதுநகர் ஒன்றியத்தில் மொத்தம் 25 இடங்களில் 14 இடங்களை அதிமுக  கைப்பற்றி வெற்றி பெற்று உள்ளது. அதிமுகவை எதிர்த்து போட்டியிட்ட திமுக 10 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது. விருதுநகரில் அதிமுகவின் வெற்றியை அப்பகுதி அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகிறார்கள்

Exit mobile version