திருப்பூரில் வெற்றி கனியை பறித்தது அதிமுக

தமிழகத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திருப்பூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில்  அ.தி.மு.க. அதிக இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவி மொத்தம் 17 இடங்களில் 12 இடங்களை அதிமுக  கைப்பற்றி வெற்றியை பெற்று உள்ளது. அதிமுகவை எதிர்த்து போட்டியிட்ட திமுக 5 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது.

திருப்பூர்  அதிமுகவின் வெற்றி கோட்டை என்பதை மக்கள் உள்ளாட்சி தேர்தல் மூலம் நிரூபித்துள்ளனர். இந்த வெற்றியை அப்பகுதி அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Exit mobile version