அதிமுகவின் பாதுகாப்பிற்காகவே கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது – மாஃபா பாண்டியராஜன்

அதிமுகவின் பாதுகாப்பிற்காகவே கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 8 நாடுகளை சேர்ந்த பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்து கொண்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் அவர், எப்பொழுது தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்ளவதே அதிமுகவின் நிலைப்பாடு எனக் கூறினார். 20 தொகுதிகளுக்கும் நாடாளுமன்றத் தேர்தலின் போதோ அல்லது அதற்கும் முன்பே தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு அதிமுக எப்போதும் தயாராகவே இருப்பதாக குறிப்பிடார்.

இது தொடர்பாக எதிர் தரப்பினர் எந்த மாதிரியான மேல் முறையீடு செய்வார்கள் என்பது குறித்து தங்களுக்கு கவலை இல்லை என்றும், இந்த மேல்முறையீட்டில் அதிமுகவின் பாதுகாப்பிற்காகவே கேவியட் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், இந்த பாதுகாப்பு தனிநபர் சார்ந்தது அல்ல என்றும், கழக பாதுகாப்பிற்காக சட்ட ரீதியாக அணுகி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version