ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி ரத்த தானம், மருத்துவ முகாம்கள் நடத்த அதிமுக வேண்டுகோள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் தினத்தில், ஆடம்பர நிகழ்ச்சிகளை தவிர்த்து, ரத்த தானம் மற்றும் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டுமென்று தொண்டர்களுக்கு அதிமுக வேண்டுகோள் விடுத்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா சிலைக்கு, முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

தொண்டர்கள் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் எளிமையோடும், எளியோருக்கு உதவிடும் வகையில் நல்ல நோக்கத்துடன் இருக்க வேண்டும் என்று அதிமுக கேட்டுக்கொண்டுள்ளது.

கண் தானம், ரத்த தானம், மருத்துவ முகாம்கள் நடத்துதல், கவிதைப் போட்டிகள், விளையாட்டு போட்டிகளை நடத்தவும், அன்னதானங்கள் வழங்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version