தேர்தல் வெற்றி என்பது மக்கள் அளிக்கும் நற்சான்றுப் பத்திரமாகும்: அதிமுக

இடைத்தேர்தல் வெற்றி குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இடைத்தேர்தல் நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளின் வாக்காளப் பெருமக்களுக்கு இதயமார்ந்த நன்றி தெரிவித்து கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனநாயக ஆட்சி முறையில், தேர்தல் வெற்றி என்பது மக்கள் அளிக்கும் நற்சான்றுப் பத்திரமாகும் எனவும், கொள்கைகளில் சற்றும் சமரசம் இன்றி, தமிழ்நாட்டின் உரிமைகளை நிலை நாட்டவும், தமிழ்நாட்டு மக்களின் வளமான வாழ்க்கைக்கும், அமைதியான சமூக சூழலை உறுதி செய்யவும், இந்தியாவிலேயே அனைத்து துறைகளிலும் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டவும், எங்களால் இயன்ற அனைத்தையும் செய்வோம் என்று உறுதி கூறுகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலுக்காக உழைத்திட்ட அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும், தோழமை கட்சிகளுக்கும், அதன் தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version