அதிமுகவின் மேலும் 3 எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் – சபாநாயகருக்கு அதிமுக கொறடா ராஜேந்திரன் பரிந்துரை

அதிமுகவில் உள்ள மேலும் மூன்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகருக்கு அதிமுக கொறடா பரிந்துரை செய்துள்ளார். அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்னசபாபதி, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ கலைச்செல்வன், விருத்தாசலம் எம்.எல்.ஏ பிரபு ஆகியோர் ஏற்கனவே தினகரனின் அமமுக வில் பொறுப்பில் இருப்பதால், அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப, சபாநாயகருக்கு அதிமுக கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்துள்ளார். இதையடுத்து, சபாநாயகர் தரப்பிலிருந்து, மூன்று எம்.எல்.ஏக்களுக்கும் விரைவில் நோட்டீஸ் அனுப்பப்படும் என்று தெரிகிறது. ஏற்கனவே, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மூன்று எம்.எல்.ஏக்களிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதற்கு அவர்கள் பதில் அளிக்காத பட்சத்தில், 18 எம்.எல்.ஏக்களைப் போன்று, இவர்களும் தகுதி நீக்க நடவடிக்கைக்கு உள்ளாவார்கள்.

Exit mobile version