அரியலூரில் தீ விபத்தில் வீடுகளை இழந்த குடும்பங்களை அதிமுக எம்.எல்.ஏ நேரில் சந்திப்பு

ஜெயங்கொண்டம் அருகே மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் வீடுகளை இழந்த 3 குடும்பங்களை, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராமஜெயலிங்கம் நேரில் சென்று சந்தித்தார். 

அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் நிதியுதவி மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார். தீ விபத்தில் சுமார் 6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்த நிலையில், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக சட்டமன்ற உறுப்பினர் வாக்குறுதியளித்தார். 

Exit mobile version