பெரம்பலூரில் இடைக்கால பொது செயலாளருக்கு உற்சாக வரவேற்பு !

பெரம்பலூர் மாவட்டம் அதிமுகவினர் சார்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று அரியலூரில் நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டத்திற்கு சென்று கொண்டிருந்தார். அவர் செல்லும் வழியிலேயே பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அரியலூர் மாவட்டத்தில் பொன்மனச்செம்மல் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெறுவதினை ஒட்டி, எதிர்கட்சி தலைவர் அவர்கள் அரியலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அவர் சென்று கொண்டிருக்கும் வழியிலேயே அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. பெரம்பலூரில் ஆயிரக் கணக்கான தொண்டர்கள் ஒன்றிணைந்து எதிர்கட்சி தலைவர் அவர்களுக்கு பிரம்மாண்ட வரவேற்பினை செய்தனர். முக்கியமாக பெண்கள் பூரண கும்பம்த்தினை ஏந்திக்கொண்டு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மலர் மாலைகள் தூவப்பட்டு சண்டமேளம் அடிக்கப்பட்டு எதிர்கட்சி தலைவரின் வருகையினை விமர்சையாக தொண்டர்கள் கொண்டாடினார்கள்.

Exit mobile version