கொரோனவால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு உணவு திட்டம் : அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி வழங்கல்

கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களுக்கு முன்னாள் அமைச்சரும் அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி உணவுகளை வழங்கினார்.

 

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செம்மேடு, காந்தி காலனி, முட்டத்துவயல், முள்ளாங்காடு, கோட்டைகாடு, போளுவாம்பட்டி, ஆதி திராவிடர் காலனி, ஆகிய மலை கிராம குதியில் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் ஏழை எளிய மக்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மதிய உணவு வழங்கினார். இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பு பொருட்களான முககவசம், கிருமிநாசினி மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து போளுவாம்பட்டி பகுதியில் உள்ள மக்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி உணவுப் பொட்டலங்களை வழங்கினார். தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக தினமும் ஒவ்வொரு பகுதியாக சென்று மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்தி துவக்கி வைத்து வருகிறார்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version