அனைவரையும் வாழ வைக்கக் கூடிய ஒரே இயக்கம் அதிமுக: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

 அனைவரையும் வாழ வைக்கக் கூடிய ஒரே இயக்கம் அதிமுக என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பணிகள் தொடர்பாக அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றினார். அனைவரையும் வாழ வைக்கக்கூடிய இயக்கம் அதிமுக என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.மேலும் அதிமுகவை சேர்ந்தவர்களின் விசுவாசத்தை பார்த்தே மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களுக்கு பதவிகளை அளித்தார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நாடு இளைஞர்கள் கையில் உள்ளது என்று தெரிவித்த முதலமைச்சர், இளமைக் காலத்தை நல்லமுறையில் பயன்படுத்தினால் பிற்காலத்தில் செழிப்பாக வாழ முடியும் என்றார். அனைவரையும் வாழவைக்கக்கூடிய இயக்கத்தில் இணைந்துள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

Exit mobile version