மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்களை அதிமுக அரசு செய்து வருகிறது: துணை முதல்வர்

மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்களை ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து அதிமுக அரசு செய்து வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெருமிதம் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். காஞ்சிபுரத்தில் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்., மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்களை ஒவ்வொன்றாக பார்த்து, பார்த்து செய்த அம்மாவின் வழியில் அதிமுக அரசு நடந்து வருகிறது என பெருமிதம் தெரிவித்தார்.

பிரசாரக் கூட்டத்திற்கு முன்னதாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தரிசனம் செய்தார். அப்போது கோயில் நிர்வாகம் சார்பில் துணை முதல்வருக்கு சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது.

Exit mobile version