விவசாயிகளுக்கு எதிராக அரசு ஒருபோதும் செயல்படாது – மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி

விவசாயிகளுக்கு எதிராக அதிமுக அரசு ஒருபோதும் செயல்படாது என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி உறுதி அளித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற மின்சார ஊழியர்களின் மாநாட்டில் கலந்து கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். விளை நிலங்களில், உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைப்பது தொடர்பாக விவசாயிகள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கஜா புயல் பாதித்த பகுதிகளில் பணியாற்றிய மின் வாரிய ஊழியர்களுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மூலம் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். 

Exit mobile version