நாடாளுமன்றத்தில் மேகதாது விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி அ.தி.மு.க. தேசியளவில் கவன ஈர்ப்பு

மேகதாது விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பி அ.தி.மு.க. தேசியளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பல்வேறு விஷயங்கள் குறித்த மசோதாக்களை கொண்டு வரும் முயற்சியில் மத்திய பா.ஜ.க. அரசு உள்ளது. ஆனால் காங்கிரஸ், அ.தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி வருகின்றன.

மக்களவை இன்று கூடியதும், மேகதாது, ரபேல் உள்ளிட்ட விவகாரங்களை கையிலெடுத்து எதிர்க்கட்சிகள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கத்தை எழுப்பினர். ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று பா.ஜ.க. உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதனால், மக்களவையை பிற்பகல் வரை ஒத்திவைத்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார்.

Exit mobile version