’அரசின் அனைத்து துறைகளிலும் உதயநிதியும், சபரீசனும் அராஜகம் செய்துவருகின்றனர்’ – முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. மணிமாறன் குற்றச்சாட்டு!

udhayanidhi sabareesan

திரைத்துறை மட்டும் இல்லாமல் அனைத்து துறைகளிலும் முதல்வரின் மகன் உதயநிதி, மருமகன் சபரீசன் அராஜகம் செய்து வருவதாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.மணிமாறன் குற்றம்சாட்டி உள்ளார்.

அனைத்து துறைகளிலும் லஞ்சம், ஊழல் தலை விரித்தாடும் நிலையில், வரும் தேர்தலில் திமுகவிற்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தக்க பாடம் புகட்டுவார் என அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மணிமாறன், ’காகித ஓடம் கடல் அலை மீது போவது போல மூவரும் போவோம்’ என்பது போல தினகரன், பன்னீர்செல்வம், சசிகலா சென்றுள்ளதாகவும், அதிமுகவை வஞ்சித்த இவர்களை தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

Exit mobile version